பதிவு செய்த நாள்
10
ஜூலை
2013
11:07
திருவேங்கடம்: கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.பால்வண்ணநாதசுவாமி சன்னதி கொடிமரத்திற்கு அருகேயுள்ள நந்தீஸ்வரருக்கு பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி போன்ற அபிஷேகம் நடந்தது. பின்பு பிரதோஷ நாயகன் சுவாமி சந்திரசேகரர், சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் மும்முறை பவனி, நந்தீஸ்வரருக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியார், அர்ச்சர்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.