வடமதுரை: வடமதுரை அருகே மூன்று கிராம மக்கள், மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர். வேலாயுதம்பாளையம், டி.புதூர், மூனாண்டிபட்டி ஆகிய மூன்று கிராம மக்கள், ஒன்று சேர்ந்து அருகிலுள்ள ஊற்றாங்கரைக்கு ஊர்வலமாக சென்றனர். அங்குள்ள கோயில் வளாகத்தில் கன்னிமார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து, அபிஷேகம் செய்து மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.