Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெக்காளியம்மன் கோவில் தீமிதி விழா ... சேலத்தில் ஜெகந்நாதர் ரதயாத்திரை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2013
10:07

திருத்தணி: இரண்டு அம்மன் கோவில்களில் நடந்த மகா கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். திருத்தணி அடுத்த, முருக்கம்பட்டு கிராமத்தில், மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 75 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், ஐந்து யாக சாலைகள், 500 கலசங்கள் அமைத்து, கடந்த, 8ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜை, வாஸ்து சாந்தி உட்பட பல்வேறு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, மூன்றாம் கால யாகசாலை பூஜை, காலை, 9:30 மணிக்கு கலச ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, 10:15 மணிக்கு, கோவில் விமானத்தின் மீது கலச நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், திருத்தணி ஆசிரியர் நகரில் அமைந்துள்ள மூகாம்பிகா அம்மன் கோவிலில், நேற்று காலை, 9:00 மணி முதல், காலை, 10:30 மணி வரை கும்பாபிஷேகம் விழா நடந்தது. விழாவை ஒட்டி, கோவில் வளாகத்தில் மூன்று யாக சாலைகள், 208 கலசங்கள் அமைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. காலை, 10:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, விமானத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் ஆடி மாதத்தின் ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் பிலாஸ்பூர் ஸ்ரீ சக்கர மகா மேரு பீடம் சச்சிதானந்த தீர்த்த ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar