பதிவு செய்த நாள்
15
ஜூலை
2013
10:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கோவிலில், ஆனி திருமஞ்சன விழா நடந்தது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தட்சணாயன புண்ணிய கால கொடியேற்று விழா கடந்த, 7ம் தேதி நடந்தது. இதையொட்டி, தினம் அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழா தொடர்ந்து, பத்து நாட்கள் நடக்கிறது. தினம், காலை, இரவு நேரங்களில் விநாயகர், சந்திரசேகரர் மேளதாளம் முழங்க மாட வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், சிவகாமி அம்மையார், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கானபக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஸ்வாமி வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.