பதிவு செய்த நாள்
15
ஜூலை
2013
10:07
திருப்புவனம்: மடப்புரம் காளி கோயிலில் இதுவரை வழங்கப்பட்டு வந்த பிரசாத விற்பனையில், பக்தர்களை கவரும் வகையில் "திருப்பதி லட்டு போன்று பெரிய லட்டு விற்கப்படுகிறது.இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட மடப்புரம் காளிகோயில் தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது. வெளி மாவட்டங்களிலிருந்து பஸ் போக்குவரத்து இயக்கப்படுவதால், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்குள்ள பிரசாதக்கடையில், புளியோதரை, சர்க்கரை பொங்கல், சாதம், வடை, லட்டு, அப்பம், முறுக்கு போன்ற பலகாரங்கள் விற்கப்படுகின்றன. ஜூலை முதல் தேதியிலிருந்து புதியவர்கள் கடை நடத்த ஏலம் எடுத்துள்ளனர். இவர்கள், விற்பனைக்காக திருப்பதியில் வழங்கப்படும் லட்டு போன்று பெரிய சைஸ் லட்டு, ரவா லட்டு, விற்பனைக்கு வைத்துள்ளனர். ஒரு லட்டின் விலை ரூ. 40, ரவா லட்டு, சாதா லட்டு சேர்த்து ரூ. 100க்கு மூன்று விற்கப்படுகிறது.