பதிவு செய்த நாள்
15
ஜூலை
2013
11:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், கவுசிகேஸ்வரர் கோவிலில், உலக நன்மை வேண்டி, அதிருத்ர மகா யாகம் நடந்தது. காஞ்சிபுரம், ஸ்ரீ காமாட்சியம்பிகா சமேத கவுசிகேஸ்வரர் கோவிலில், 4ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, உலக நன்மை, அனைவருக்கும் இன்பத்தையும், நீண்ட ஆயுளையும், ஆரோக்யத்தையும், செல்வத்தையும், உணவையும், மன அமைதியையும், நன் மனதையும், நல்ல எண்ணத்தையும், இன்ப சுகங்களையும் கொடுக்க வேண்டும் எனவும், அனைத்து ஜீவராசிகளும் நலமாக வாழவேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து, அதிருத்ரம் எனப்படும், "ஸ்ரீருத்ர மத்திரத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பிராமணர்களைக் கொண்டு, மகா யாகம், ஜூலை 5ம் தேதி துவங்கியது. காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் விஜயேந்திர சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு, யாகத்தை துவக்கி வைத்தனர். 14,641 முறை ஜபஹோமங்கள் செய்து, கலசாபிஷேகம் செய்யப்பட்டது. ராஜப்பா சிவாச்சாரியார் தலைமையில், சிவச்சாரியார்கள் ருத்ர மத்திரங்களை ஓதினர். யாகத்திற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அர்ச்சகர் தர்மலிங்க சிவாச்சாரியாரும், கவுசிகேஸ்வர கைங்கர்ய சபா உறுப்பினர்களும் இணைந்து செய்திருந்தனர்.