Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாலிங்க சுவாமி கோவில் திருவிழா சிவகிரி கோயிலில் ஆடி பூக்குழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லால்குடி கோவிலில் புதையல் தொல்லியல் துறை ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2013
11:07

திருச்சி: லால்குடி அருகே திருமணமேடு பஞ்சநதீஷ்வரர் கோவிலில் கிடைத்த புதையல் காசுகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்கின்றனர். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமணமேடு கிராமத்தில், பழமை வாய்ந்த பஞ்சநதீஷ்வரர் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. 12ம் நூற்றாண்டில், சோழ மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. கோவில் முன்பகுதியில் மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான அஸ்திவாரம் தோண்டும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. ஆறடி ஆழத்தில், காசுகள் அடங்கிய மண் கலயம் ஒன்று கிடைத்தது. புதையல் கிடைத்ததாக ஊருக்குள் தகவல் பரவியது. பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக கோவிலுக்கு வந்தனர். இதற்கிடையே கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி, லால்குடி தாசில்தார் ஸ்டெல்லா ஞானமணி பிரமிளா உள்ளிட்டோர் கோவிலில் கிடைத்த காசுகளை பார்வையிட்டனர். அப்போது அந்த காசுகள் செப்புக்காசுகள் என்பது தெரியவந்தது. அதையடுத்து மண்கலயம் மற்றும் காசுகளை ஆர்.டி.ஓ., பார்த்திபனிடம் ஒப்படைத்தனர். அவர் முன்னிலையில் எண்ணியபோது, மொத்தம், 35 செப்புக்காசுகள் இருந்தன. அந்த நாணயங்கள் எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பதை கண்டறிய தொல்லியல் துறையினர் வசம் இன்று ஒப்படைக்கப்படும் என்று, நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர். கோவிலில் புதையல் கிடைத்த சம்பவம் அப்பகுதி மக்களை பரவசப்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியையொட்டி சிறப்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஐந்தாம் நாளான நேற்று முற்பகல் 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவிலில் இன்று மாலை நடந்த கருட சேவை நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar