கோத்தகிரி சுள்ளிக்கூடு மகாலிங்க சுவாமி கோவில் திருவிழா நடந்தது. மைசூர் நஞ்சன்புரம் சற்குரு மடாதிபதி சதாநந்த சுவாமிகள் தலைமையிலும், இட்டக்கல் பசுவேஸ்வரர் மடாதிபதி சிவக்குமார சுவாமிகள் முன்னிலையிலும் விழா நடந்தது. இதில், சுள்ளிக்கூடு சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர் லிங்கன் உட்பட பலர் செய்திருந்தனர்.