Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புனித சந்தனமாதா ஆலய மின் அலங்கார ... கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானமிகு வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர் சேக்கிழார்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
10:07

சென்னை: தமிழகத்தில், ஜாதிகளிடையே நிலவிய, ஏற்றத்தாழ்வினை எதிர்த்து போராடி வரும், தமிழின ஒற்றுமைவாதிகளின் கேடயமாக பெரியபுராணம் பயன்படுகிறது, என, ஐகோர்ட் நீதிபதி, வாசுகி பேசினார்.21ம் ஆண்டு விழாசென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின், 21ம் ஆண்டு, சேக்கிழார் விழா நடந்தது. அதில், சேக்கிழார் ஆராய்ச்சி மைய தலைவர், முன்னாள் நீதிபதி, நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில், சேதுராமன் எழுதிய, "தேவாரத்தில் தொன்மம் நூல் வெளியிடப்பட்டது. நீதிபதி நடராஜன் வெளியிட, வெங்கடேசுவரன் பெற்றுக் கொண்டார்.இதில், ஐகோர்ட் நீதிபதி, வாசுகி பேசியதாவது: தமிழுக்கு பல புதிய வார்த்தைகளை தந்தவர், சேக்கிழார். இல்லாள் என்ற வார்த்தைக்கு, இல்லாளன் என்ற ஆண்பால் வார்த்தையை தந்தார். பெரியபுராணத்தில், நீதி, நியாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், ஐந்து முக்கிய வழக்குகளை காணலாம்.

மனுநீதி சோழனின் மகன் மீது, பசு தொடுத்த வழக்கு; சுந்தரர் மீதான கிழ வேதியரின் அடிமை வழக்கு; திருநீலகண்ட நாயனாரின் திருவோட்டு வழக்கு; தண்டியடிகளின் மாற்று சமயத்தவர் மீதான, நில அபகரிப்பு வழக்கு; அமர்நீதி யாரின் கோவண பிரச்னையால், உருவான வழக்கு. இவ்வாறாக, உரிமை மீறல் வழக்கு, உரிமை வழக்கு, குற்ற வழக்கு, பெரியபுராணத்தில் பேசப்படுகிறது.உள்ளத்தை கவர்ந்தவர்மனுநீதி கண்ட சோழனின் வரலாற்றில், நீதி நெறிமுறை மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் பொருந்தும் என, புதுமை காட்டினார். ஆத்திகர் உள்ளத்தை மட்டுமல்ல; நாத்திகர் உள்ளத்தையும் கவர்ந்தவர், சேக்கிழார். "மானமிகு என்ற வார்த்தையை நாத்திகர்கள் பயன்படுத்துவதற்கு முன்பு, பெரியபுராணத்தில் அவர் பயன்படுத்தி உள்ளார். தமிழகத்தில், ஜாதிகளி டையே நிலவிய, ஏற்றத் தாழ்வினை எதிர்த்து போராடி வரும், தமிழின ஒற்றுமைவாதிகளின் கேடயமாக பெரிய புராணம் பயன்படுகிறது. காந்தியடிகள், பெரியபுராண நந்தனார் சரித்திரத்தை சொல்லி, தீண்டாமை பிரசாரம் மேற் கொண்டார். இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி திருமலையில் நான்கு நாட்கள் நடைபெற்று வந்த சங்கோபங்க ஸ்ரீ ஸ்ரீனிவாச விஸ்வசாந்தி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு புதிய தேர் செய்யப்பட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கோபுர ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை, குறிஞ்சேரியில் ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில் கும்பாபிகும்பாபிஷேகம் இன்று சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar