12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீமசங்கரம். இங்கு கோயில் கொண்டிருப்பவர் பீமசங்கர ஸ்வாமி. இதே மாநிலத்தில், நாசிக் எனப்படும் பஞ்சவடிக்கு அருகேயுள்ள திரியம்பகமும் ஜோதிர்லிங்க தலமாகும். கவுதம முனிவரின் சிவபக்தியை உணர்ந்த ஈசன், கங்கையை கோதாவரியாக வரவழைத்த இடம் இது என்கிறார்கள்.