ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதி அர்த்த மண்டபத்தில் வெள்ளிக்குறடு என்னும் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலை 6 மணிக்கு ஆண்டாள் ரங்கமன்னாருடன் ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். இந்த நேரத்தில் ஆண்டாளை தரிசனம் செய்தால் திருமண பாக்கியம் விரைவில் கிட்டும் என்பது நம்பிக்கை.