Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செப்.,11ல் சிவகங்கைக்கு விவேகானந்தர் ... சென்னை அருங்காட்சியகத்தில் 2,000 ஆண்டு பழமையான தாழி சென்னை அருங்காட்சியகத்தில் 2,000 ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபுர கலச சிகரம் கீழே விழுந்தது காளஹஸ்தியில் அடுத்த பரபரப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஆக
2013
10:08

காளஹஸ்தி: காளஹஸ்தி சிவன் கோவில் கோபுரத்தின், கலச சிகரம் ஒன்று, நேற்று கீழே விழுந்தது. காளஹஸ்தி சிவன் கோவில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற வாயு தலமாகும். ராகு - கேது சர்ப்ப தோஷ பரிகார பூஜைகள் செய்து கொள்ள உகந்த இடமாக விளங்குகிறது. கடந்த 2010, மே, 26ம் தேதி, கோவிலின் ராஜ கோபுரம், திடீரென இடிந்து விழுந்தது. இதனால், பக்தர்களிடையே கலக்கமும், பரபரப்பும் ஏற்பட்டது. அப்போதைய ஆந்திர முதல்வராக இருந்த ரோசய்யா, 2010, அக்டோபர், 1ம் தேதி, புதிய ராஜகோபுரம் அமைக்க அடிக்கல் நாட்டி, 2012ம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, அறிவித்தார். ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், ராஜகோபுர பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கோவிலின் நுழைவாயில் கோபுரத்தின் மேலுள்ள, யாழி சிற்பம் திடீரென கீழே விழுந்து உடைந்தது. இதற்கு எந்த பரிகார பூஜையும் செய்யாமல், இரவோடு இரவாக, சிமென்ட்டால் புதிய சிற்பத்தை கட்டிவிட்டனர். தொடர்ந்து பராமரிக்காத காரணத்தால், கோபுரங்களில் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. கடந்த சில நாட்களாக, காளஹஸ்தி பகுதியில், லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை, கோவிலின் பிர தான கோபுரமான, பிக்ஷõலா கோபுரத்தின் மேலுள்ள, 11 கலசங்களில், ஒரு கலசத்தின் மீதுள்ள சிகரம் கீழே விழுந்தது. அச்சமயத்தில், பக்தர்கள் நடமாட்டம் இல்லாததால், எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. கோவில் நிர்வாகம், பரிகார பூஜை செய்து, கலச சிகரம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar