பதிவு செய்த நாள்
06
செப்
2013
11:09
அனுப்பம்பட்டு: அனுப்பம்பட்டு, முத்தாளம்மன் கோவில் ஆடித் திருவிழா விமரிசை யாக நடந்தது. பொன்னேரி அடுத்த, அனுப்பம்பட்டு கிராமத்தில் உள்ள, முத்தாளம்மன் கோவிலில், ஆடித் திருவிழா நடந்தது. கடந்த மாதம், 28ம் தேதி, செல்லியம்மனுக்கு வாடைப் பொங்கலுடன் திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து, காப்பு கட்டுதல், குடம் சுற்றி வருதல், கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து ஆறு தினங்கள் நடந்த திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, அம்மன் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.