பதிவு செய்த நாள்
06
செப்
2013
11:09
ஆர்.கே.பேட்டை: விளக்கணாம்பூடி புதூர் சக்தியம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, விளக்கணாம்பூடி புதூர் கிராமத்தில் உள்ள சக்திஅம்மன் கோவிலில், ஜாத்திரை திருவிழா நடந்தது. காலை 9:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தன. பெண்கள், பொங்கல் வைத்து படையல் வைத்தனர். 11:00 கூழ் வார்த்தலும், அன்னதானமும் நடைபெற்றன. மாலை, பம்பை, உடுக்கை முழங்க, உற்சவம் சிறப்பாக நடந்தது. இதே போல், ஆர்.கே. பேட்டையிலும், அம்மன் திருவிழா நடந்தது.