Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதிக்கு பக்தர்கள் வரவேண்டாம்: ... பிரம்மோத்சவத்துக்கு தயாராகிறது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏர்வாடியில் தவா துவா திட்டம்: மனநலத்திற்கு பிரார்த்தனையுடன் சிகிச்சை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 செப்
2013
11:09

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஏர்வாடியில், ஒரு மாதத்திற்குள் அரசு சார்பில், பிரார்த்தனையுடன் கூடிய மனநல சிகிச்சை மையம் துவங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏர்வாடி தர்காவிற்கு, தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து தங்கி, மனநல நோய்க்கு பிரார்த்தனை செய்கின்றனர். அங்கு, பிரார்த்தனையுடன், உரிய சிகிச்சை பெற, அரசு முயற்சி எடுத்துள்ளது. இதற்காக மருத்துவ பணி இயக்குனர் டாக்டர் சந்திரநாதன் தலைமையில் மனநல திட்ட, மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராமசுப்பிரமணி, பெரியார் லெனின் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மற்றும் ஏர்வாடி தர்கா நிர்வாகக்குழு தலைவர், செயலாளர் உட்பட 10 பேர், குஜராத், உணவாவில் உள்ள சையது அலி மிரா தத்தார் தர்காவில் செயல்படும் "தவா துவா(சிகிச்சை, பிரார்த்தனை) திட்டத்தை பார்வையிட்டு வந்துள்ளனர். ராமநாதபுரம், டாக்டர் பெரியார் லெனின் கூறியதாவது: இத்திட்டத்தின்படி, முதலில் தர்காவில் பிரார்த்தனைக்கு பின் சிகிச்சை. மீண்டும் பிரார்த்தனை செய்வதாகும். குஜராத்தில் சிறப்பாக செயல்படுகிறது. அங்கு தினமும் 100க்கும் மேற்பட்டோர், பயனடைந்து வருகின்றனர். அதேபோல, ஏர்வாடி தர்காவில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை, அரசுக்கு அனுப்பபடும். ஒரு மாதத்திற்குள், ஏர்வாடியில், அரசின், சிகிச்சை மையம் துவங்கப்பட உள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் புதிய பஸ்ம குளம் அமைக்க, நேற்று பூமிபூஜை போடப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலை ... மேலும்
 
temple news
புதுச்சேரி; சாரம் நாகமுத்துமாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது. சாரம் முத்து ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன்கோயில் பங்குனி பொங்கலை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar