பதிவு செய்த நாள்
16
செப்
2013
10:09
ஊத்துக்கோட்டை:தாராட்சி நாராயண பெருமாள் கோவிலில், இன்று (16ம் தேதி), கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை அடுத்த, தாராட்சி கிராமத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீதேவி பூதேவி உடனுறை சவுந்தர்ய நாராயண பெருமாள் கோவில். இக்கோவில், சிதிலமடைந்து காணப்பட்டது. பொதுமக்கள் பங்களிப்புடன், கோவில் சீரமைக்கும் பணி, நடைபெற்று வந்த நிலையில், பணிகள் முடிவடைந்து, கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று மாலை, கணபதி பூஜை, வாஸ்து சாந்தியுடன் சிறப்பு பூஜைகள் துவங்கின. இரவு, முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை, 11:00 மணிக்கு புண்ணியவாசனம், அக்னிபிரதிஷ்டை, இரண்டாம் கால யாக பூஜை ஆகியவை நடைபெறும். மாலை, பெருமாள் கண் திறத்தல், மகா சாந்தி ஹோமம் ஆகியன, நடைபெற உள்ளது. இன்று (16ம் தேதி), காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, கும்ப புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு கும்பாபிஷேக விழா, துவங்குகிறது. மாலை, 4:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இரவு, சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.