Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏர்வாடி தர்காவில் கொடியேற்றம்: ... ஸ்ரீவாரி பாதங்களுக்கு இன்று தங்க கவசம் அணிவிப்பு! ஸ்ரீவாரி பாதங்களுக்கு இன்று தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழைகாத்தம்மன் கோவில் புரட்டாசி விழா: அம்மனாக வழிபட 7 சிறுமிகள் தேர்வு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 செப்
2013
10:09

மேலூர் : மேலூர் அருகே, வெள்ளலூர் ஏழைகாத்தம்மன் கோவிலில், சிறுமிகளை, அம்மனாக வழிபடும் புரட்டாசி திருவிழா, நேற்று துவங்கியது. மதுரை மாவட்டம், வெள்ளலூர், 60 கிராமங்களை உள்ளடக்கிய பகுதி. இதை ஐந்து மாகாணங்களாக பிரித்து, "வெள்ளலூர் நாடு என, அழைக்கின்றனர். இங்குள்ள ஏழைகாத்தம்மன் கோவில் திருவிழா, புரட்டாசிதோறும் கொண்டாடப்படும்.விழாவில் ஏழு சிறுமிகளை தேர்வு செய்து, அம்மனாக கருதி கொண்டாடுவர். நேற்று காலை, மூண்டவாசி, வேங்கபுலி உட்பட, 11 கரைகளை சேர்ந்த, 22 அம்பலகாரர்கள், 22 இளங்கச்சிகள் முன்னிலையில், அம்மனாக வழிப்பட கூடிய ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். 11 கரையை சேர்ந்த, 100 சிறுமிகள் இதற்காக கோவில் முன் பெற்றோருடன் கூடினர். அம்மனின் குழந்தைகளாக தேர்வு பெற்ற ஏழு சிறுமிகளும், 15 நாட்கள் இரவில் கோவிலில் தங்கி, பகலில், 60 கிராமத்தினருக்கும் ஆசிர்வாதம் வழங்குவர். இதை தொடர்ந்து, 15வது நாளில், பெண்கள், மது கலயம் மற்றும் சிலைகளை சுமந்தும், ஆண்கள், தங்கள் உடலில் வைக்கோல் பிரியை சுற்றியும், நேர்த்திக் கடன் செலுத்துவர்.விழா நடக்கும், 15 நாட்களிலும், 60 கிராமங்கள் மற்றும் இங்கிருந்து வெளியூர், வெளிநாடு சென்றவர்கள் விரதம் இருப்பர். மாமிச உணவு, தாளித்த உணவு வகை சாப்பிடுவதில்லை. விரத நாட்களில் இப்பகுதி ஓட்டல்களிலும் இவ்வகை உணவுகள் சமைப்பதில்லை. பச்சை மரங்கள் வெட்டுதல், கட்டடம் கட்டுதல், மண்ணை தோண்டுதல் போன்ற பணிகளும் நடப்பதில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar