மதுரை : மதுரை கூடல்நகர் அசோக்நகர் முதல்வீதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில், நவராத்திரி விழா அக்.,5 முதல் 13 வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, மீனாட்சி அம்மனுக்கு லட்சார்ச்சனை, தேவி மகாத்மிய பாராயணம் நடக்கிறது. தொடர்ந்து சண்டீஹோமம், சுவாசினி மற்றும் கன்னியா பூஜை, அம்மனுக்கு புஷ்பாஞ்சலி, சுந்தரேஸ்வரருக்கு அன்னாபிஷேகமும் நடக்கிறது. சனிதோறும் ஸ்ரீதேவிபூதேவி சமேத கரியமாணிக்க பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. நான்காவது சனிக்கிழமை சுதர்சன ஹோமமும் நடக்கிறது. பொருளுதவி செய்ய எஸ்.பாஸ்கர வாத்தியாரை 98430 14721ல் தொடர்பு கொள்ளலாம்.