Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி கோயில் நவராத்திரி விழா கோபுரத்தில் செடி வளர்வதால் சிற்பங்கள் உடையும் அபாயம் கோபுரத்தில் செடி வளர்வதால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துறவி கோலம் பூண்ட குடும்பம்: ஜெயின் அமைப்பினர் கோலாகலம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 செப்
2013
10:09

ஈரோடு: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, ஒரே குடும்பத்தினர், துறவிக்கோலம் பூண்டனர். அவர்களுக்கு ஈரோட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம், பாடுமேல் பகுதியை சேர்ந்தவர் கவுதம்போத்ரா, 42. இவரது மனைவி உஷாபோத்ரா, 37. இவர்களுக்கு, பரத், 14, ஆகாஷ், 10, என்ற இரு மகன்கள் உள்ளனர். ஐதராபாத்தில், ஜவுளிக்கடையை, கவுதம்போத்ரா நடத்தி வந்தார். ஜெயின் சமூகத்தின் மீது, அதீத பற்று கொண்டவராக கவுதம்போத்ரா இருந்து வந்தார். எனவே, தன் குடும்பத்தினருடன், துறவு மேற்கொள்ள கவுதம்போத்ரா முடிவு செய்தார். அதற்கு, அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள ஜெயின் கோவிலில், தாங்கள் துறவு மேற்கொள்வதாக விருப்பம் தெரிவித்தனர். துறவு மேற்கொள்ளும் முன், இந்தியா முழுவதும் ஜெயின் சமூகத்தினர் உள்ள பகுதிக்கு சென்று, ஜெயின் அமைப்பினரின் வாழ்த்துகளை பெற்று, மகிழ்வோடு துறவு மேற்கொள்வது நடைமுறை. அதன்படி, நேற்று, ஈரோடு வந்த கவுதம்போத்ரா குடும்பத்தினருக்கு, ஈரோட்டில் உள்ள ஜெயின் அமைப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஈரோடு, ஜெயின் கோவிலில் வழிபாடு நடத்தினர். பின் அலங்கரிக்கப்பட்ட காரில், மணிக்கூண்டு வழியாக, ஈஸ்வரன் கோவில் வீதிக்கு, கவுதம்போத்ரா குடும்பத்தினரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஜெயின் அமைப்பினரை, இக்குடும்பத்தினர் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர். நவம்பர், 20ம் தேதி, குஜராத்தில் உள்ள ஜெயின் ஆலயத்தில், கவுதம்போத்ரா குடும்பத்தினர் துறவு மேற்கொள்ள உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar