பதிவு செய்த நாள்
05
அக்
2013
11:10
ஊத்துக்கோட்டை: தாராட்சி பரதீஸ்வரர் கோவிலில், 10 நாள் நவராத்திரி மகோற்சவம், அக் 5 துவங்குகிறது. ஊத்துக்கோட்டை அடுத்த, தாராட்சி கிராமத்தில் அமைந்துள்ளது லோகாம்பிகா சமேத பரதீஸ்வரர் கோவில். அக் 5, சனிக்கிழமை, இக்கோவிலில், 10 நாள் நவராத்திரி விழா துவங்குகிறது. இதை ஒட்டி, தினமும், காலை, 6:30 மணிக்கு, சிறப்பு ஹோமமும், தொடர்ந்து, அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறும். மாலை, 5:30 மணிக்கு, சகஸ்வரநாம அர்ச்சனை நடைபெறும்.