Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் நவராத்திரி விழா ... ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா நிறைவு! ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா நிறைவு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆட்டு தலையுடன் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 அக்
2013
10:10

கமுதி:கமுதி அருகே ஆள் உயர மண்பீடம் அமைத்து, செம்மறி ஆடுகளின் தலையை படைத்து, அதன் கறியை வெறும் நீரில் சமைத்து உண்ணும், ஆண்களுக்கான வினோத வழிபாடு நடந்தது. கமுதி அருகேயுள்ளது முதல்நாடு கிராமம். இங்குள்ள எல்லை பிடாரி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், ஒரு நாள் விழா கொண்டாடுவது வழக்கம். நேற்று, நடைபெற்ற விழாவில், சிலை வழிபாடு அல்லாத இங்கு, இரவு, 9:00 மணிக்கு கூடும் ஆண்கள், 12:00 மணிக்குள் ஆளுயர பீடத்தை மணலால் எழுப்புவர். பின், 31 செம்மறி ஆடுகளை பலி கொடுத்து, அதன் தலைகளை பீடத்தை சுற்றிலும் வைக்க வேண்டும். ஆடுகளின் இறைச்சியை மசாலா பொருள் சேர்க்காமல் வெறும் நீரில் வேகவைத்து சமைப்பர். தனியாக பச்சரிசி சாதம் வடித்து, அதில் ஆளுக்கு ஒரு உருண்டை மட்டும் தரப்படும். இறைச்சியை எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம். சமைக்கப்பட்ட உணவு, பனை ஓலையில் வைத்தே உண்ணும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. ஆனால், மீதமுள்ள இறைச்சியை பீடத்தை சுற்றிலும் புதைத்துவிட வேண்டும். விளக்கின் வெளிச்சத்தில் இரவு முழுவதும் நடைபெறும் இவ்விழா பகுதியை சுற்றி, 5 கி.மீ., தூரத்திற்கு பெண்கள் நுழைய அனுமதி கிடையாது. வழக்கமாக நடைபெறும் இவ்விழாவில், முதல்நாடு, குடிக்கினியான், பாப்பாங்குளம் உட்பட சுற்றுப்புற சில கிராமத்தினர் ஆயிரக்கணக்கில் கூடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
 பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடுவாயூர் அருகே உள்ள கேரளபுரம் விசாலாட்சி சமேத ... மேலும்
 
temple news
வானுார்; வானுார் அருகே வெள்ளந்தாங்கி வீரனார் கோவிலில் ஆண்கள் மட்டும் பொங்கலிட்டு வழிபாடு ... மேலும்
 
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7.00 மணி முதல் 8.00 மணி.தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழியே ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலுக்கு வடக்கு பகுதியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar