சின்னமாரியம்மன் கோவில் கோபுரத்தில் இடி தாக்கி சிற்பங்கள் சேதம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2013 12:10
பவானி: அந்தியூர் செம்புளிச்சாம்பாளையத்தில் சின்னமாரியம்மன் கோவில் கோபுரம் மீது இடி தாக்கியபதால், செம்புக் கலசம் சேதம் அடைந்தது. சிற்பங்களும் உடைந்து விழுந்தன. கோயிலை இடி தாக்கியதால், ஊருக்கு ஏதேனும் கெடுதல் நேரலாம் என பரவலாக பேசப்பட்டதால், அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.