திருத்தணியை அடுத்த நாபளூர் அகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும், தொடர்ந்து சிவலிங்கத்துக்கு சாதம், பழங்களுடன் அன்னாபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.