காரைக்கால் ஏழை மாரியம்மன் கோயிலில் சம்பஸ்த்ரா அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2013 12:10
புதுச்சேரி: இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட காரைக்கால் சுயம்வர தபஸ்வினி உடனுறை பார்வதீஸ்வர சுவாமி கோயிலை சேர்ந்த, ஏழை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு கடந்த ஆண்டு அக். 28-ம் தேதி நடைபெற்றது. குடமுழுக்கு நடைபெற்ற முதலாமாண்டையொட்டி, கோயிலில் சம்பஸ்த்ரா அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, வியாழக்கிழமை கணபதி ஹோமம், மாலை ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்றது.