திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, திருவண்ணாமலையின் ஊர்க் காவல் தெய்வமான துர்க்கையம்மன் வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை சின்னக்கடை தெருவில் உள்ள ஸ்ரீதுர்க்கையம்மன் கோயில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டன.