Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவிடைமருதூரில் திருமுறை மாநாடு! சிறை கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி: பக்தர்களுக்கு விற்பனை! சிறை கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருவுடையாருக்கு பேரபிஷேக வழிபாடு: தஞ்சை பெரியகோவில் பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2013
10:11

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், ராஜராஜன் சதய விழா, இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திருமுறை திருவீதியுலா, பெருவுடையார், பெரியநாயகி திருமேனிகளுக்கு 36ம் ஆண்டாக பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு வெகுவிமரிசையாக நடந்தது. இதில், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று வழிபட்டனர். தஞ்சை பெரியகோவிலை கட்டிய சோழமன்னன் ராஜராஜன் சதய விழா, கடந்த, 10ம் தேதி துவங்கியது. கடந்தாண்டு சதய விழாவில், கோவில் யானை, 63 வயது வெள்ளையம்மாள், கம்பீரமாக பங்கேற்றது. சமீபத்தில் வெள்ளையம்மாள், "மறைவை தொடர்ந்து, அந்த இடத்தை திருவையாறு கோவில் மடத்து பெண் யானை தர்மாம்பாள், 40, பிடித்துக்கொண்டது. சதயவிழாவுக்காக தற்காலிகமாக பெரியகோவிலுக்கு வரவழைக்கப்பட்ட பெண் யானை முன்னே செல்ல, ஊர்வலம் ராஜராஜன் பூங்காவை அடைந்தது. அங்கு, ராஜராஜன் சிலைக்கு கலெக்டர் சுப்பையன் மாலை அணிவித்தார். தொடர்ந்து, ஊர்வலம் கொடிமரத்து மூலை, அரண்மனை, கீழவீதி, மேலவீதி வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. பின்னர், 9.45 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி திருமேனிகளுக்கு, 36ம் ஆண்டாக பேரபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது. இதை, அய்யப்ப ஸ்வாமிகள் நடத்தி வைத்தார். பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு நிகழ்ச்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். சதயவிழாவையொட்டி அமைக்கப்பட்ட பிரமாண்ட பந்தலில் லயநாத சங்கமம், மோகினி ஆட்டம், பட்டிமன்றம் உள்பட கலைநிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடந்தன. சதயவிழாவையொட்டி, பெரியகோவிலுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள ராஜராஜன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலையணிவித்தனர். இதையொட்டி வழக்கமாக சிலை மீட்பு குழுவினர் திடீர் போராட்டம் நடத்தலாம் என்பதால், முன்னெச்சரிக்கையாக தஞ்சை நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அண்ணாதுரை சிலை முதல், சோழன் பூங்கா வரை, வழிநெடுக, 100க்கும் மேற்பட்ட போலீஸார் நிறுத்தப்பட்டனர். தஞ்சை டவுன் டி.எஸ்.பி., அர்ஜூனன், பாபநாசம் டி.எஸ்.பி., சிவாஜி அருள்செல்வன் ஆகியோர் தலைமையில் குவிந்த போலீஸார், ஊர்வலத்தினரை கண்காணித்து, போக்குவரத்தை அடிக்கடி நிறுத்தி, பயணிகள், பக்தர்கள் வாகனங்களை அனுப்பி வைத்தனர்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
கோவை; பாரத தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பாரத மக்களின்  நலன்வேண்டி காரமடை அருகே உள்ள எல்லை ... மேலும்
 
temple news
திருவேற்காடு; திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில், நிறைமணி காட்சி விழா துவங்கியது.திருவேற்காடு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar