Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆழ்வார்குறிச்சி ஐயப்பன் கோயிலில் ... சபரிமலையில் நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்! சபரிமலையில் நாளை நடைபெறும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் நாரணி தீபம் ஏற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2013
10:11

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோயில்களிலும், வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். கார்த்திகையில் வரும் பவுர்ணமி நாள் மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. அன்று திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபம் உலகப் பிரசித்தி பெற்றது. அண்ணாமலை செல்ல இயலாதவர்கள் தங்கள் பகுதியிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று தீப தரிசனம் கண்டு வழிபட்டு நலம்பெறலாம் என்பது ஐதீகம் என்பதால் நேற்று கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு காலையிலே கோயில்களுக்கு பக்தர்கள் சென்றவண்ணம் இருந்தனர். தூத்துக்குடி சிவன்கோயில் மற்றும் பெருமாள் கோயில்களில் நேற்று காலையிலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதைப்போல் முறப்பநாடு கைலாசநாதர் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை தீப திருவிழா முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திருச்செந்தூரில் நாரணிதீபம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு இரவு கடற்கரையில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது, கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு நேற்று திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. காலையில் மூலவர் மற்றும் சுவாமி ஜெயந்திநாதருக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் மகாமண்டபத்தில் வைத்து நாரணி தீபம் ஏற்றப்பட்டு கோவில் தெய்வ சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளினார். இரவு கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த சொக்கப் பனையிலும் தீபம் ஏற்றப்பட்டது. அதன்பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
கோவை;  ஐப்பசி மாதம் சப்தமி திதி மற்றும் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி ... மேலும்
 
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar