ஹோமங்கள் நடக்கும் போது கர்ப்பஸ்திரீகள் அருகில் இருக்கக்கூடாது என்கிறார்களே, ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2011 03:03
கர்ப்பஸ்திரீகளுக்கு நல்லமுறையில் குழந்தை பிறக்கவும், தொடர்ந்து அவர்களது வம்சம் விருத்தி அடையவும் பலவிதமான சடங்குகளைச் செய்யச் சொல்லி சாத்திரங்கள் கூறியுள்ளன. இவற்றில் முக்கியமான சடங்குகளாகிய பும்சவனம், சீமந்தம் (வளைகாப்பு) போன்றவற்றை ஹோமத்துடன் தான் செய்ய வேண்டும். எனவே ஹோமம் நடைபெறும் இடங்களில் கர்ப்பஸ்திரீகள் அவசியம் இருக்க வேண்டும். இது அவர்களுக்கும், வயிற்றிலுள்ள குழந்தைக்கும் மிக மிக நல்லது.