சபரிமலையில் டிசம்பர் 6ல் இறுகும் பாதுகாப்பு வளையம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2013 10:12
சபரிமலை: டிச.,6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. டிச.,6ல் சபரிமலையில் பக்தர்களின் இருமுடி பைகள் மற்றும் அனைத்து பொருட்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். தோள்பையில் இரும்பு போன்ற எந்த பொருட்களும் 18ம் படி வழியாக கொண்டு செல்ல கூடாது. மொபைல் போன்களுக்கு அனுமதி கிடையாது. அடையாள அட்டை உள்ளவர்கள் கூட, சன்னிதான திருமுற்றத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதுபோல், பல்வேறு கோணங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் சன்னிதானத்தில் துவங்கியுள்ளது. மேலும், அடையாள அட்டை இல்லாத தொழிலாளர்கள், சன்னிதானத்தில் தங்கமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து போலீசார் வந்துள்ளனர். இவர்கள், பக்தர்கள் கூட்டத்துக்கு மத்தியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் சுற்றுப்புறங்கள் தொடர்ந்து நவீன கருவிகளால் சோதனை செய்யப்படுகிறது. இப்பாதுகாப்பு டிச.,7 பிற்பகல் வரை அமலில் இருக்கும், என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.