பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் தாயார் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2013 11:12
சேலம்: செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில், தாயார் பிரமோத்சவ உற்சவத்தை முன்னிட்டு,நேற்று இரவு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. கல்யாண கோலத்தில் பத்மாவதி தாயார்,பிரசன்னவெங்கடாசலபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.