Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் 20 நாள் அன்னதானம் தர்ம ... சபரிமலையை புறக்கணிக்கும் அரசுகள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணவாள மாமுனிகள் நினைவிடம் ஆக்கிரமிப்பு: ஜீயர் கோரிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2013
10:12

சென்னை: வைணவர்களின் குருவாகப் போற்றப்படும், மணவாள மாமுனிவரின், ஸ்ரீரங்கம் நினைவிடத்தில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, தலைமை செயலகத்தில் உள்ள, முதல்வர் தனிப் பிரிவில், கோரிக்கை மனுவையும் நேற்று அவர் அளித்தார். எம்பார் ஜீயர் மற்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர், இவ்விவகாரம் குறித்து கூறியதாவது: வைணவர்களின் குருவாக, மணவாள முனிவர் திகழ்கிறார். 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இவர், ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் கிடாரம் என்ற ஊரில் பிறந்தவர். அங்கு, சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் சுற்றுச்சுவரை இடித்து, நெடுஞ்சாலை துறை சாலை அமைக்க திட்டமிட்டு வருகிறது. தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கீழ் உள்ள இக்கோவிலின், ஒரு பகுதியை இடிப்பது, சட்டத்துக்கு புறம்பானது. அதேபோல், மணவாள முனிவரின் உடல், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. மணவாள மாமுனிவரின் நினைவிடம், பக்தர்களின் வழிபாட்டுத் தலமாகவும் உள்ளது. இப்பகுதியை, தனியார் ஆக்கிரமித்து, வழிபாட்டுக்கு இடையூறு செய்து வருகின்றனர். எனவே, முதல்வர் தலையிட்டு, சிக்கல் கிடாரம், சுந்தரராஜ பெருமாள் கோவில் பகுதியை, நெடுஞ்சாலை துறை அகற்ற முற்படுவதைத் தடுக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவிடங்களை, அரசே ஏற்று பராமரிப்பது போல, மணவாள மாமுனிவரின் நினைவிடத்தையும், அரசு ஏற்று பராமரிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar