Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெள்ளிக்கிழமை மட்டும் லட்சுமிக்கு ... கைக்கு ஐநூறு உடலுக்கு ஐயாயிரம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உழைப்பாளிகள் கைவிடப்பட மாட்டார்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2013
05:12

*பணம் அதிகாரத்தைப் பெற ஆசையை ஏற்படுத்துகிறது. அதைப் பெற்றிருப்பவனை மற்றவர்களின் துன்பங்களுக்கு இரங்காத இதயமற்றவனாக ஆக்கிவிடுகிறது.
*கவலைக்கு ஒரு பிரச்னையை எப்படி விட்டொழிப்பது எனத் தெரியாது. பய உணர்வில் சிக்கிக்கொண்டுள்ள உணர்வு நிலையே கவலை.
*ஒரு பிரச்னைக்குத் தீர்வு தெரியாமல் கவலைப்படுவதால் தான் தலைவலி, நரம்புத் தளர்ச்சி, இருதயக்கோளாறு போன்ற பிரச்னைகளை ஏற்படுகின்றன.
*பிரச்னைக்குத் தீர்வு காண அதிலுள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து சிறந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*தன்னலமற்றவர்களிடம் பணம் இருந்தால் அது வரப்பிரசாதம். சுயநலக்காரர்களின் கையில் இருந்தால் அது ஒரு சாபக்கேடு.
*தங்கம் நமது உபயோகத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது பரமனைத்தவிர வேறு எவருக்கும் சொந்தமில்லை.
*வெற்றியோ அல்லது தோல்வியோ, உங்கள் சொந்த மனத்திலே தான்தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் மீது நீங்கள் அளிக்கும் சொந்தத் தீர்ப்பே உங்களை ஏழையாகவோ அல்லது கவலையற்றவனாகவோ வைக்கிறது.
*ஒவ்வொரு முறை நீங்கள் கவலைப்படும்போதும் ஒரு மன வேகத்தடையை ஏற்படுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
*கவலை என்பது உங்கள் முயற்சிகள் என்னும் சக்கரங்களின் மீது செலுத்தப்படும் பிரேக். அதுஉங்களை முழு நிறுத்தத்திற்கு கொண்டு வருகிறது.
*சோம்பேறியாக இருப்பதைவிட அதிக பிரயத்தனம் செய்பவனாக இருந்து எதையாவது சாதிப்பது நல்லது. சோம்பேறி யானவன்இறைவனாலும் மனிதனாலும் கைவிடப் படுகிறான். உழைப் பாளிகள் அவர்களால் உற்சாகப்படுத்தப்படுவார்கள்.
*பணம் மனநிறைவை அளிக்காது. அதை சம்பாதிக்க மேற்கொள்ளப்படும் திறன்தான் மனநிறைவை அளிக்கிறது.
*உங்கள் கவலைகளிலிருந்து தப்பி ஓடிப்போக முடியாது. ஏனெனில் நீங்கள் எங்கு சென்றாலும் கவலைகளும் கூடவே வருகின்றன.
*நான் எவருக்கும் தீங்கிழைக்கவில்லை என்று ஒருவன் தனக்குத்தானே சொல்லிக்கொள்ள முடிந்தால், அவனே இப்புவியில் மிகவும் மகிழ்ச்சியானவனாக இருப்பான்.
*உங்கள் பிரச்னைகளைப் பயமின்றியும் தெளிவான மனசாட்சியுடனும் எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.
*எல்லோரும் உங்களுடைய நண்பராக இருக்க விரும்பாவிட்டாலும் நீங்கள் பதிலுக்கு எதையும் எதிர்பாராமல் எல்லோருடனும் நட்பாக இருக்க வேண்டும்.
*உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் சிலர் துரோகம் இழைத்தாலும் கவலைப்படாமல் நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
*எப்போதும் கடவுளிடம் செல்வம், வசதிவாய்ப்பு, சந்தோஷம் போன்றவற்றையே கேட்டுக் கொண்டிருக்கிறோம். கடவுளின் சாம்ராஜ்யமே நமக்குரியது தான். அதனால், அழிந்து போகும் நிலையில்லாத பொருட்களை அவரிடம் கேட்பதை கைவிடுவோம்.
*சிறிய பொருட்களைத் தேடுவதில் நேரத்தை செலவழிக்கவேண்டாம். கடவுள் ஒருவரே மிக உயர்ந்த பரிசு.
*சுயநலம் என்பது அறவே கூடாது. மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற மகிழ்ச்சியை அளிக்க முயலவேண்டும். இந்த எண்ணம் உண்டாகி விட்டால், நீங்கள்  கடவுளுக்கு நெருக்கமான மனிதராக ஆகி விடுவீர்கள்.
-யோகானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar