விழுப்புரம்: மாணிக்க வாசகர் மகாசபை சார்பில் உலக நன்மைக்காக திருவாசக முற்றோதல் வேள்வி விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 18ம் தேதி 4.30 மணிக்கு சிவசிதம்பர கந்தசாமி சிவாச்சாரிய சுவாமிகள் தலைமையில் செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து நடராஜர், மாணிக்க வாசகர், பண்ணிரு திருமுறை ஊர்வலம் நடந்தது. இதில் சிவனடியார்கள் மற்றும் மருத்துவர் சமுதாயம் சார்பில் 108 மேள வாத்தியங்களுடன் வள்ளி அண்ணாமலை திருமண மாளிகைக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணிவரை தவில் ஆசிரியர் பள்ளி குளம் கணேசன் தலைமையில் நாதஸ்வர கச்சேரி நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு மங்கள இசை, கோபூஜையும், 6 மணிக்கு மாணிக்க வாசகர் மகா சபை மாநி ல தலைவர் நந்தர் நந்தி கொடியேற்றினார். தொடர்ந்து ஆத்மாத்த மூர்த்திகள் சிவபூஜையும், 7 மணிக்கு புனித நீர் வழிபாடு, மகா கணபதி வேல்வி, உலக நன்மைக்காக திருவாசக முற்றோதல் வேள்வி நடந்தது. 2 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், மகா தீபாராதனையும் நடந்தது. மாலை 4.30 மகா திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் செஞ்சி நகர மருத்துவர் சமுதாயத்தினர் கலந்து கொண்டனர்.