Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ரூ. 50 ... ராமேசுவரம் ராமநாதசுவாமிக்கு 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
5 மணி போராட்டத்துக்குப் பின்னர் மணக்குள விநாயகர் கோவில் யானை நலவாழ்வு முகாமுக்கு புறப்பட்டு சென்றது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2013
11:12

யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் திருக்கோவிலை யொட்டியுள்ள பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த முகாமில் தமிழகத்தில் இருந்து ஏராளமான யானைகள் கலந்து கொண்டுள்ளன. இந்த முகாமில் புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வக்புவாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான பெண் யானை லட்சுமியும் கலந்து கொள்ள தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனுமதி அளித்தார். மணக்குள விநாயகர் கோவில் யானை இதனை தொடர்ந்து மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி லாரி மூலம் முகாமுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக உப்பளத்தில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் யானை லட்சுமியை லாரியில் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. கோவில் யானை அதிகாலை 3 மணியளவில் அங்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஒரு சறுக்கு மரம் அமைக்கப்பட்டு அதன் வழியாக அந்த யானையை லாரியில் ஏற்ற முயன்றனர். சுமார் 3 மணி நேரம் போராடியும் யானை பாகனால் அந்த யானையை லாரியில் ஏற்ற முடியவில்லை. பின்னர் அந்த முயற்சியை கைவிட்டனர். 5 மணி நேர போராட்டம் இதனை தொடர்ந்து குரும்பாப்பேட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் வைத்து யானையை லாரியில் ஏற்ற முடிவு செய்தனர். இதற்காக யானை லட்சுமியை உப்பளத்தில் இருந்து குரும்பாப்பேட்டிற்கு நடத்தியே அழைத்து சென்றனர். லாரியும் அங்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு யானைக்கு உணவு வழங்கப்பட்டு சிறிது நேரம் ஓய்வு கொடுக்கப்பட்டது. பின்னர் ஒரு மேடான இடத்தின் அருகே லாரியை நிறுத்தி அதன் வழியாக யானையை லாரியில் ஏற்றினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar