அனைத்து மாவட்டங்களிலும், மாணவ, மாணவியருக்கு, திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகளை நடத்த, இந்து சமய அறநிலையத் துறையின், அனைத்து இணை கமிஷனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருடன் இணைந்து, அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அடுத்த மாதம், முதல் வாரத்துக்குள் போட்டிகளை, நடத்தி முடிக்க வேண்டும் எனவும், உத்தரவிடப்பட்டுள்ளது.