Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திங்கட்கிழமையும் பிரதோஷ வலம் வரலாம்! பூஜை செய்ய ஏற்ற திசை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2013
02:12

*உலகம் முழுவதையும்அன்பினால் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். இந்த உலகில் யாரும் உங்களுக்குஅந்நியமானவர் அல்ல.
*நம்பிக்கையும், உறுதியுமே வாழ்வின் அடிப்படை. இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாம் இருப்பதற்குச் சமம் தான்.
*யாராவது ஒருவருக்கு மனமகிழ்ச்சியைக் கொடுக்கமுடியுமானால், உன் வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டது என்று பொருள்.
*கடவுளை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கடவுளை நேசிப்பவன் எவனோ அவனே புண்ணியவான்.
*சோம்பலால் உடல்மட்டுமில்லாமல் மனமும் கெட்டுவிடுகிறது. சோம்பலைப் புறக்கணித்து விட்டு ஆற்று வெள்ளம் எப்போதும் ஓடிக் கொண்டிருப்பது போலசுறுசுறுப்புடன் இயங்குங்கள்.
*கருணையும், இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்று அழைக்க முடியாது.
*தவறுவது மனித இயல்பு. அதைப் பெரிதாக எண்ண வேண்டியதில்லை.நடந்ததையே மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருந்தால் துன்பம் தான் உண்டாகும்.
*செல்வந்தன் பணத்தின் மூலமும், ஏழைஇறைவனின் நாமத்தை உச்சரிப்பதன்மூலமும் தொண்டு செய்ய வேண்டும்.
*மனமே எல்லாமுமாக இருக்கிறது. மனம் தூய்மையானால் அன்றி எந்த நன்மையும் உண்டாகாது.
*துன்பம் வந்த காலத்தில் மட்டும் கடவுளை மக்கள் தேடுகின்றனர். ஆனால், இளமையிலேயேகடவுளைத் தேடுபவனே பேறு பெற்றவன்.
*மனதில் ஆசைகள் குறையும் அளவிற்கு ஒருவனுக்குஅமைதியும், நிம்மதியும்உண்டாகும்.
*கடவுளைக் காண்பதும், எப்போதும் அவன் நினைவில் மூழ்கிக் கிடப்பதுமே நம் வாழ்வின் லட்சியமாகும்.
*நீங்கள் ஒரு பொருளை மதித்தால் அதுவும் உங்களை மதிக்கும். அதனால், அற்பமானது என்று எதையும் இழிவாக நினைக்காதீர்கள்.
*கடவுளிடம் கண்ணீர் விட்டு அழுது விடுங்கள். இதனால், மன அழுக்கும், துன்பமும் குறைந்து விடும்.
*சந்தனத்தைத் தொட்ட கை மணப்பது போல, கடவுளைத் தியானித்தால் மனமும் கடவுள் மயமாகி, எங்கும் நறுமணம்பரவும்.
*சுடும் வார்த்தைகளைப்பேசுவதால், ஒருவரது சுபாவமே கொடுமையாக மாறுகிறது.அநாவசியமாகவோ, பிறர் விரும்பாதவற்றையோ பேசுதல் கூடாது.
*மனிதன் மரணத்தைக் கண்டு அழுகிறான். ஆனால், மகானோ சிரிக்கிறான். இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடு இது தான்.
*துன்பத்தைக் கண்டுதுவளாதீர்கள். அவை நீடித்துஇருப்பதில்லை. பாலத்தின்அடியில் ஓடும் நீரைப் போல, அவை ஓடி மறைந்து விடும்.
*விலை கொடுத்து வாங்ககடவுள் காய்கறி அல்ல. நேர்மை, சத்தியம், அன்பு இவையேகடவுளுக்கு பிடித்தமானவை. கடவுளை சரண் அடைந்தால், அளவற்ற கருணையை நம் மீது பொழிவார்.
*மன அமைதியை விரும்பினால், பிறர் மீது குற்றம் சுமத்தாதீர்கள். மாறாக எப்போதும் உங்கள் குறைகளை எண்ணிப் பாருங்கள்.
*நற்செயல் செய்ய, காலத்தை எதிர்நோக்கி காத்திருக்க கூடாது.
-குருமாதா

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar