Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பரிகாசம் செய்தாலும் பலன் தருபவர்! ஐயப்ப பக்தர்களின் அனுபவம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உருண்டை சாப்பிட்ட பெரியவர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2013
02:12

காஞ்சிப்பெரியவர் கும்பகோணத்தில்  முகாமிட்டிருந்தார். அப்போது ஒரு மூதாட்டி வந்தார். பெரியவா! என் கணவர் உயர்ந்த உத்தியோகத்தில் இருந்தார். என் மகளை நல்ல இடத்தில்  கல்யாணம் செய்து கொடுத்து விட்டேன். வருங்காலத்தில் என் சொத்தையெல்லாம், தர்ம காரியங்களுக்கு செலவிட விரும்புகிறேன், என்றார்.  அதற்குரிய நேரம் வரும் போது, இதுபற்றி பதில் தெரிவிப்பதாக பெரியவர் பதிலளித்தார்.  கும்பகோணத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற பெரியவர், மூதாட்டியின் நினைவு வர, மடத்திற்கு அழைத்து வரச் சொன்னார். அவரிடம், காஞ்சிபுரத்திலுள்ள சில கோயில்களுக்கு திருப்பணியும்,  வேத பாடசாலைக்கு நிதியுதவி செய்யும் படியும் கூற, அதை அந்த அம்மையார் நிறைவேற்றினார். அதன்பின், மடத்திலேயே தங்கி பெரியவரை  தினமும் தரிசனம் செய்து வந்தார். ஒருமுறை, அந்த மூதாட்டி, தான் தயாரித்த, சத்துமாவு உருண்டையை ஏற்று உண்ண வேண்டும் என பெரியவரிடம் வேண்டிக் கொண்டார். மகாபெரியவரும் மகிழ்ச்சியுடன், அதில் சிறிது மட்டும் எடுத்து உருண்டைகளாக்கி சாப்பிட்டார். மீதியை அவரிடமே கொடுத்து விட்டார்.  அன்று நாள் முழுவதும் பெரியவர் பிட்சை ஏற்கவில்லை.  பெரியவரின் வழக்கத்திற்கு மாறான இந்தச் செயல் மடத்திலுள்ள ஊழியர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஊழியர் மட்டும் பெரியவர் அருகே சென்றார்.  அப்போது, பெரியவர் , சிறு சிறு உருண்டை களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  இதைக் கண்ட ஒரு ஊழியர், பெரியவா! இன்னுமா அந்த சத்துமாவை சாப்பிடுறீங்க! எனகேட்டார்.  டேய்! சத்துமாவு ருசியாக இருந்தது. அதனால், அதை விரும்பி சாப்பிட்டேன். ஆனா, நாக்கு கேட்கும் போதெல்லாம் ருசியானதை சாப்பிட்டு கிட்டே இருக்கக்கூடாது. அதனாலே, அந்த ருசியை மாற்றக்கூடிய வகையிலே, சாண உருண்டையை சாப்பிட்டேன். சாண உருண்டை சாப்பிட்டா, எதையும் சாப்பிடத் தோன்றாது. சாப்பிட்ட உணவும் செரித்து விடும் என்றார்.  உணவு விஷயத்தில், மனிதர்கள் நாக்கைக்  கட்டுப்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்ல. பசுஞ்சாணத்தின் மகத்துவத்தையும் மக்களுக்கு அவர் போதித்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar