திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமி தரிசனம் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.