புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோவிலில், இன்று கூடாரவல்லி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.இதுகுறித்து, கோவில் தனி அதிகாரி சீனுவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வன்னியபெருமாள் கோவில் ஸ்ரீநிவாஸ பெருமாள் தேவஸ்தானத்தில் வைகுண்ட ஏகாதசி மகா உற்சவம் நேற்று சிறப்பு திருமஞ்சனத்துடன் துவங்கியது. இரண்டாவது நாளான இன்று (11ம் தேதி) அதிகாலை 4:00 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு கூடாரவல்லி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.