Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னங்குறிச்சியில் மாட்டு பொங்கல் ... தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலைப்பகுதியில் பூப்பறிக்கும் விழா சென்னிமலை பெண்கள் உற்சாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2014
11:01

சென்னிமலை: சென்னிமலை பகுதியில், தை பொங்கலை முன்னிட்டு, பூப்பறிக்கும் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் இளம் பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, மலைகளில் இருந்து ஆவாரம் பூ பறித்தனர். தை பொங்கலை முன்னிட்டு, சென்னிமலை பகுதியில் தை இரண்டாம் நாள், பூப்பறிக்கும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று, சென்னிமலை நகரில் உள்ள பொதுமக்கள், சென்னிமலையின் தென்புறம் உள்ள மணிமலை பகுதிக்கு சென்று, பூப்பறித்து வந்தனர். இதேபோல் தொட்டம்பட்டி, தோப்புபாளையம், அய்யம்பாளையம், சில்லாங்காட்டுவலசு, வெப்பிலி, சொக்கநாதபாளையம், எல்லைகுமாரபாளையம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள், முதலமடை பகுதியிலும், ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் நொய்யல் ஆற்றங்கரை பகுதியிலும், முருங்கத்தொழுவு, குமாரபாளையம், பழையபாளையம், இளம் பெண்கள் அம்மன்கோவில் பகுதியிலும், தாங்கள் கொண்டு சென்ற கரும்பு மற்றும் உணவுகளை உண்டு மகிழ்ந்து, அப்பகுதியில் பூத்துக்குலுங்கும் ஆவாரம் பூக்களை பறித்து வந்தனர். பூப்பறிக்கும் நிகழ்ச்சியின்போது, இளம் பெண்கள், தைப்பொங்கலின் பெருமையை கூறும் வகையில், பாட்டுப்பாடி, கும்மி அடித்து மகிழ்ந்தனர். பின், மாலையில் வீடு திரும்பி, வாசலில் கோலமிட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று காலை, தாங்கள் பறித்து வந்த பூக்களை ஆறு, கிணறுகளில் போடுவார்கள். இந்த ஆண்டு பெண்கள் கூட்டம், மிக அதிகமாக இருந்தது. படித்த பெண்கள் பலர், கூட்டம் கூட்டமாக வந்து பூப்பறிக்கும் விழாவில், கலந்து கொண்டு, உற்சாகமாக கும்மியடித்து மகிழ்ந்தனர். இளவட்ட ஆண்களும், வேட்டி அணித்து, புதுமையாக கும்பல் கும்பலாக வந்திருந்தனர். அதிக இளவட்ட பெண்கள், ஆண்கள் திரண்டதால், அசம்பாவிதம், திருட்டு போன்றவை நடக்காமல் இருக்க, சென்னிமலை எஸ்.ஐ., துரைசாமி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar