திருச்சி: உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. கடந்த 8-ம் தேதி தொடங்கிய தைப்பூசத் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. காலை 10.30 மணிக்கு வடம் பிடிக்கப்பட்ட தேர் 11.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.