Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தோரணமலை கோவிலில் தைப்பூச விழா ... சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் தெப்ப உற்சவம்! சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் தைப்பூச திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜன
2014
10:01

கோவை: முருகனின் ஏழாவது படைவீடான மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று தைப்பூசம் விழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகபெருமானை தரிசனம் செய்தனர். கோவை அருகே உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாக பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா, கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தைப்பூசத்தையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு மகா அபிஷேகம், ராஜஅலங்காரம், உஷகால பூஜை, தீபாராதனைகள் நடந்தது. காலை 6.30 மணிக்கு விநாயகர் பூஜை, கங்கணம் கட்டுதல், கலசபூஜை, ஹோமம், பட்டுவஸ்திரம் சாத்துதல், தாரைவார்த்து கொடுத்தல் மற்றும் திருமாங்கல்ய தாரணம் செய்யப்பட்டது. காலை 7.20 மணிக்கு, வள்ளி,தெய்வானை உடனமர் சுப்ரமணியசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதன் பின், பெரியதேரில் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியசாமியும் திருத்தேருக்கு எழுந்தருளினார். பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், கோவை கலெக்டர் அர்ச்சனாபட்நாயக், எம்.எல்.ஏ., மலரவன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது, பக்தர்களின் அரகரா கோஷம் முழங்க, திருத்தேர் கோவில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி வந்தது. கோவையில் உள்ள வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி, வேலாண்டிபாளையம், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, வேலுடன், பாத யாத்திரையாக வந்து நேற்று காலை முதலே சுப்ரமணியரை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar