Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தோரணமலை கோவிலில் தைப்பூச விழா ... சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் தெப்ப உற்சவம்! சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் தைப்பூச திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜன
2014
10:01

கோவை: முருகனின் ஏழாவது படைவீடான மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று தைப்பூசம் விழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகபெருமானை தரிசனம் செய்தனர். கோவை அருகே உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாக பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா, கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தைப்பூசத்தையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு மகா அபிஷேகம், ராஜஅலங்காரம், உஷகால பூஜை, தீபாராதனைகள் நடந்தது. காலை 6.30 மணிக்கு விநாயகர் பூஜை, கங்கணம் கட்டுதல், கலசபூஜை, ஹோமம், பட்டுவஸ்திரம் சாத்துதல், தாரைவார்த்து கொடுத்தல் மற்றும் திருமாங்கல்ய தாரணம் செய்யப்பட்டது. காலை 7.20 மணிக்கு, வள்ளி,தெய்வானை உடனமர் சுப்ரமணியசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதன் பின், பெரியதேரில் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியசாமியும் திருத்தேருக்கு எழுந்தருளினார். பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், கோவை கலெக்டர் அர்ச்சனாபட்நாயக், எம்.எல்.ஏ., மலரவன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது, பக்தர்களின் அரகரா கோஷம் முழங்க, திருத்தேர் கோவில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி வந்தது. கோவையில் உள்ள வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி, வேலாண்டிபாளையம், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, வேலுடன், பாத யாத்திரையாக வந்து நேற்று காலை முதலே சுப்ரமணியரை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar