மதுரை: மதுரை கொடிக்குளம் அயிலாங்குடியில், ஸ்ரீ லட்சுமி வராஹப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. நரசிம்ம ஆசிரம சங்கரசுவாமிகள் முன்னிலை வகித்தார். பெருமாள் திருமஞ்சன அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெங்களூரு ஸ்ரீநித்யா கிருஷ்ணன் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை, மேனேஜிங் டிரஸ்டி சேஷாத்ரி செய்திருந்தார்.