பதிவு செய்த நாள்
21
பிப்
2014
11:02
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் 24 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று முன் தினம் காலை 10 மணிக்கு துவங்கி மாலை 6.30 மணிக்கு முடிந்தது.இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் ஜோதி, வேதா முன்னிலையில் இப்பணிகள் நடந்தன. இதில் 24 லட்சத்து 20 ஆயிரத்து 738 ரூபாய் ரொக்கமும், 290 கிராம் தங்க நகையும், 690 கிராம் வெள்ளி நகையையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அறங்காவலர் தலைவர் சரவணன், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சின்னத்தம்பி, வடிவேல், சேகர், மேலாளர் முனியப்பன் ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், சுரேஷ் உடனிருந்தனர்.