விருத்தாசலம்: சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவாராத்திரியை முன்னிட்டு ரணகளிப்பு உற்சவ விழா கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் அங்காளபரமேஸ்வரி அம்மன் பள்ளி கொண்ட அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா சென்றார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.