Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருதுநகர் கோயில் கலசத்தை ... உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி கோவிலில் விடிய விடிய ஒலித்த ஓம் நமசிவாய!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2014
10:03

அவிநாசி:மகா சிவராத்திரியை முன்னிட்டு, அவிநாசி கோவிலில் விடிய விடிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு துவங்கி அதிகாலை வரை, பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.மகா சிவாரத்திரி விழா, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இரவு 8.00 மணிக்கு துவங்கிய கால பூஜை, இரவு 10.00 மணி, நள்ளிரவு 12.00 மணி, அதிகாலை 3.00 மணி, 5.00 மணிக்கு நிறைவடைந்தது. ஒவ்வொரு கால பூஜையின்போதும், சிவபெருமானுக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வகை திரவியங்களினால், அபிஷேகம் செய்விக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள், நான்கு வேதங்களையும் பாராயணம் செய்ய, ஓதுவா மூர்த்தி மற்றும் சிவனடியார்கள் சிவபுராணம், திருமுறை பாட, ஒவ்வொரு காலத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அவிநாசி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கூட்டம் அதிகளவில் கோவிலுக்கு வந்திருந்தனர். நீண்ட வரிசையில் மணிக்கணக்கில், காத்திருந்து எம்பெருமானை வணங்கிச் சென்றனர்.சிவனடியார்கள் நான்கு காலமும் சிவபூஜை செய்தனர். அடியார்கள் மற்றும் பக்தர்கள் விடிய விடிய "ஓம் நமசிவாய கூறி, சிவபுராணம், தேவாரம், திருவாசம் உள்ளிட்டவற்றை பாராயணம் செய்து கொண்டிருந்தனர். மகா சிவராத்திரியோடு பிரதோஷமும் இணைந்து வந்ததால், பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. சுவாமி தரிசன வசதிக்காக, மூங்கில் தடுப்பிலான வரிசையை, கோவில் நிர்வாகத்தினர் அமைத்திருந்தனர். கோவில் சபா மண்டபத்தில், பள்ளி மாணவியர்களின் நடன நிகழ்ச்சி மற்றும் நாதஸ்வர நிகழ்ச்சி விடிய விடிய நடந்தது. திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், பழங்கரை பொன்சோழீஸ்வர சுவாமி கோவில், கருவலூர் கங்காதீஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வரசுவாமி கோவில், நடுவச்சேரி கோதைப்பிராட்டீச்சுர சுவாமி கோவில், குட்டகம், மொக்கனீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவலாயங்களிலும் சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar