திருப்பரங்குன்றத்தில் கிரிவல பக்தர்களுக்கு ஒரு லட்சம் ருத்ராட்சம் வழங்க ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2026 05:03
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் இன்று பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு முருக பக்தர்கள் பேரவை சார்பில் ஒரு லட்சம் ருத்ராட்சம் வழங்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற வேண்டும் என முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர், திருப்பரங்குன்றம் பூர்வீக குடியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் விரைவில் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆன்மிக சிந்தனையாளர்கள், முருக பக்தர்கள் இன்று திருப்பரங்குன்றம் கிரிவலத்தில் பங்கேற்க வேண்டுமென முருக பக்தர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர். கிரிவலத்திற்கு வரும் பக்தர்களுக்கு முருக பக்தர்கள் பேரவை சார்பில் ருத்ராட்சம் வழங்கப்படுகிறது.