திருப்போரூர்: திருப்போரூர் முருகன் கோவிலில் மாசி கிருத்திகை திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் காவடிகள் தூக்கி பம்பை, உடுக்கை ஆட்டத்துடன் வந்து , சரவணப்பொய்கையில் நீராடி தங்களது நேர்த்தி கடனை தீர்த்தனர்.