Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா சுடலை மாடசாமி கோயிலில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2014
11:03

புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பக்திபரவசத்துடன் கோலாகலமாக நடந்தது. கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று தேர் வடம் தொட்டு இழுத்தனர். புதுக்கோட்டை அடுத்த திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா கடந்த 2ம் தேதி ஆரம்பமாகியது. 17ம் தேதி முடிய விழா தொடர்ந்து, 16 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று(10ம் தேதி) தேர் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. நேர்த்திகடன் நிறைவு செய்வதற்காக மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகுகள் குத்தியும், பறவை காவடி, வேல் காவடி, புஷ்ப காவடி என விதவிதமான காவடிகள் எடுத்தும் பவனி வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதையடுத்து உச்சபூஜைக்காக அம்மனுக்கு சந்தணக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மாலை, 3 மணிக்கு தேரோட்டத்துக்கான சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையடுத்த முத்துமாரியம்மன் உல்ஸவமூர்த்திக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு சர்வ அலங்காரம் நடந்தது. மாலை, 4 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.

மேளதாளமும், பெண்களின் மங்கல குரவையும் ஓங்கி ஒலிக்க மாவட்ட கலெக்டர் மனோகரன் தேரோட்டத்தை வடம் தொட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து "அம்மா தாயே முத்துமாரி என்ற சரண கோஷத்தை உச்சரித்தவாறு பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்கள் கூட்டத்தின் நடவே ஆடி அசைந்தவாறு வலம் வந்த தேர் சரியாக, 5.40 மணிக்கு கோவிலின் முன்பு நிலைக்கு வந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சர்வ அலங்காரத்துடன் முத்துமாரியம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. திருவப்பூர், திருக்கோகர்ணம், மாலையீடு, மச்சுவாடி, மேட்டுப்பட்டி, காமராஜபுரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பந்தல்கள் அமைக்கப்பட்டு காலையில் மோர், சர்பத், பானகம் வழங்கப்பட்டது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு விடிய, விடிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் டேங்கர் லாரிகள் மூலம் கோவிலைச் சுற்றி அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்பட்டது. தேர் திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், மண்டகபடிதாரர்கள், விழா கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதியில் நடைபெறும் புஷ்ப யாகத்திற்கான பிரமாண்டமான மலர் ஊர்வலம் இன்று காலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாத கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முருகன் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
லண்டன்; தீபாவளி மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து, லண்டனின் நீஸ்டனில் உள்ள பிஏபிஎஸ் ... மேலும்
 
temple news
ஹைதராபாத்; பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று (அக்.29 ல்) மாலை ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே, 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர்கால மூத்ததேவி கல் சிற்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar