Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் பங்குனித் ... ஜொலிக்குது ராமேஸ்வரம் கோவில் ஓவியங்கள்! ஜொலிக்குது ராமேஸ்வரம் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி திருக்கல்யாணம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2014
10:03

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி திருக்கல்யாணம் கோலாகலமாக, நேற்று காலை நடந்தது. ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், கடந்த 7ம் தேதி துவங்கியது. சிறப்பு திருமஞ்சனம் இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான வெள்ளி தேர், திருத்தேர் திருவிழா, வெள்ளி மாவடி சேவை ஆகியவை சிறப்பாக நடந்தது. பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான நேற்று, காலை திருக்கல்யாணம் உற்சவம் வெகு சிறப்பாக நடந்தது. ஏகாம்பரநாதருடன் ஊடல் கொண்டு, நேற்று முன்தினம் காலை ஏலவார்குழலி அம்மன், ஒக்கப்பிறந்தான் குளம் அருகில் உள்ள, மண்டபத்திற்கு சென்று விடுகிறார். அவரை அழைப்பதற்காக, காமாட்சி அம்மன், ஆதி காளிகாம்பாள், கன்னியம்மன் ஆகிய மூன்று அம்பாள்களும், நேற்று முன்தினம் இரவு அங்கு எழுந்தருளினர். அவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. பின்னர், ஏலவார்குழலியை, தோழிகளான மற்ற மூன்று அம்பாளும், ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள, 16 கால் மண்டபத்திற்கு நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு அழைத்து வந்தனர். பின் ஏலவார்குழலி அம்மனை கம்பா நதிக்கு நீராட அனுப்பிவிட்டு, அவரவர் சன்னிதிக்கு திரும்பினர். நள்ளிரவு 2:00 முதல் நேற்று அதிகாலை 4:00 மணி வரை ஏலவார்குழலி அம்மன் கம்பா நதியில் மணலால் லிங்கம் அமைத்து, பூஜித்த தல வரலாற்று நிகழ்ச்சி நடந்தது. திருவீதி உலா அதன் பின் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலிக்கு அங்கு மாலை மாற்றப்பட்டு, ஆயிரம்கால் மண்டபத்தின் மீது, திருக்கல்யாணம் நடக்கும் இடத்தில் எழுந்தருளினர். அதிகாலை 5:15 மணியளவில், திருக்கல்யாணம் நடந்தது. அதை தொடர்ந்து, திருமண கோலத்தில் தங்க இடப வாகனத்தில் ஏகாம்பரநாதரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், ஏலவார்குழலி அம்மனும் எழுந்தருளி, காலை 6:30 மணிக்கு திருவீதிவுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar